ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகளில் மாற்றம் வேண்டும் – மாணவர்கள் கோரிக்கை!!

0
ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகளில் மாற்றம் வேண்டும்-மாணவர்கள் கோரிக்கை!!
ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகளில் மாற்றம் வேண்டும்-மாணவர்கள் கோரிக்கை!!
ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகளில் மாற்றம் வேண்டும்-மாணவர்கள் கோரிக்கை!!

ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கான வழிமுறைகள் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வுகளில் சில மாற்றங்களை திரும்ப பெற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜேஇஇ தேர்வுகள்:

இந்தியா முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி கல்லூரிகளில் இன்ஜினியரிங் பயில ஜேஇஇ தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கவுள்ள ஜேஇஇ தேர்வுகளில் சில மாற்றங்கள் உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஜேஇஇ தேர்வுகள் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நான்கு கட்டங்களாக நடைபெறும் எனவும், நான்கு கட்ட தேர்வுகளிலும் மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்றாற்போல் கலந்து கொள்ளலாம் எனவும் அதில் அதிக மதிப்பெண் பெற்ற தேர்வு கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அஞ்சல்துறை அக்கவுண்டண்ட் தேர்வுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – தேர்வர்கள் வருத்தம்!!

மேலும் கணினி வழியில் இந்த தேர்வுகள் நடத்தப்படும் தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. கேட்கப்பட்ட 90 கேள்விகளில் 75 கேள்விகளுக்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும். இந்த தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடிகளில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி உள்ளிட்ட அறிவிப்புகளை, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று மாலை அறிவிப்பார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்கள் சில கோரிக்கைகளை மத்திய அரசிடம் எடுத்து வைக்கின்றனர்.

அவ்வாறு கூறப்பட்ட மாணவர்களின் கோரிக்கைகள் சில,

ஒரு மாணவன் ட்விட்டரில் கூறும்போது, “ஜேஇஇ தேர்வுகளில் பங்கேற்க மாணவர்கள் அறிவியல் பாடத்தில் கட்டாயம் 75% பெற்றிருக்க வேண்டும் என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். கொரோனா காரணமாக எங்கள் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. எனவே எண்களின் மதிப்பெண்கள் குறைந்து விட்டன.

இன்னொரு மாணவன் ”கோவிட் தொற்று மற்றும் டெல்லி கலவரத்தால் எங்களின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே ஐஐடி, என்ஐடிகளுக்கு 75 சதவீத மதிப்பெண் தேர்ச்சி என்ற தகுதியை நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் விரைவில் நடத்தப்படவேண்டும் – மாணவர்கள் கோரிக்கை!!

மேலும் ஒரு மாணவன், “கொரோனா தொற்று காரணமாக என்னால் கடந்த முறை ஜேஇஇ மெயின் மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகளைச் சரியாக எழுத முடியவில்லை 2019ஆம் ஆண்டு தேர்வர்களுக்கு ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வெழுத இன்னொரு வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!