தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை – கொரோனா எதிரொலி!!
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காலத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பள்ளிக்கல்வித்துறை அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர்கள்:
தமிழகத்தில் ஆண்டுதோறும் குழந்தை தொழிலாளர்கள் முறைக்கு எதிரான இயக்கம் என்ற அமைப்பு மூலமாக குழந்தை தொழிலாளர்களின் கணக்கெடுப்பு மேற்கொண்டது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் 818 குழந்தைகளிடத்தில் எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி சமூகத்தில் பின்தங்கிய குடும்பத்தினரிடம் குழந்தை தொழிலாளர் முறை மீண்டும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கும் போது கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மக்கள் வேலையிழந்து காரணத்தினாலும், பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதாலும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்க வசதி இல்லாத காரணத்தினாலும் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு – உயர்கல்வித்துறை அறிவிப்பு!!
குறிப்பாக பட்டியலின, பழங்குடி இனத்தை சேர்ந்த 15 – 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த தங்களது குடும்பங்களை காப்பாற்ற வேலைக்கு செல்கின்றனர். 2020-ல் செப்டம்பர் முதல் நவம்பர் வரை எடுக்கப்பட்ட ஆய்வின் படி 818 சிறுவர்களில் 231 பேர் கொரோனா காலத்திற்கு முன்னரே வேலைக்கு செல்வதாக கூறப்படுகின்றனர். கொரோனா காலத்திற்கு பிறகு 650 பேர் அதில் பணிக்கு செல்கின்றனர்.
தமிழகத்தில் மாணவ மாணவியருக்கான மாதிரி வாக்குப்பதிவு – ஆர்வத்துடன் பங்கேற்பு!!
கடந்த காலத்தை ஒப்பிடுகையில் இது மூன்று மடங்கு அதிகமாகும். மேலும் வேலைக்கு செல்லும் சிறுவர்களில் பெரும்பாலும் அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சில மாணவர்கள் சிறு வயதிலேயே ஊதியம் பெற்று பழகியதால் அவர்கள் பள்ளிக்கு செல்வது கேள்வி குறியாக உள்ளது. இவ்வாறு வேலைக்கு செல்லும் பெரும்பான்மையானவர்கள் அரசு பள்ளி மாணவர்கள்.
தமிழக தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – ஏப்ரல் 8 கடைசி நாள்!!
அவர்களில் 43% பேரே இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள முயன்றவர்கள். 24% பேர் வகுப்புகளில் கலந்து கொள்வதை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டவர்கள். இந்த கணக்கெடுப்புகளை மட்டுமே வைத்தே இதனை கணக்கீடு செய்ய முடியாது இருந்த போதிலும் பள்ளிக்கல்வித்துறை அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.