தமிழகத்தில் மாணவ மாணவியருக்கான மாதிரி வாக்குப்பதிவு – ஆர்வத்துடன் பங்கேற்பு!!

0
தமிழகத்தில் மாணவ மாணவியருக்கான மாதிரி வாக்குப்பதிவு - ஆர்வத்துடன் பங்கேற்பு!!
தமிழகத்தில் மாணவ மாணவியருக்கான மாதிரி வாக்குப்பதிவு - ஆர்வத்துடன் பங்கேற்பு!!
தமிழகத்தில் மாணவ மாணவியருக்கான மாதிரி வாக்குப்பதிவு – ஆர்வத்துடன் பங்கேற்பு!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் மாணவ மாணவியருக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

மாணவர்களுக்கான வாக்குபதிவு:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து நிர்வாகமும் தேர்தல் ஆணையத்தில் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் தேர்தல் பணிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

தேர்தல் முடியும் வரை அனைத்து அலுவலகங்களும் சிறப்பு அலுவலர்களை கொண்டு சோதனை செய்வது, துணை ராணுவங்களை குவிப்பது, வாக்குப்பதிவு செய்யும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு, வாக்காளர்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு, வாக்கு பதிவு இயந்திரங்களை பலத்த பாதுகாப்புடன் கொண்டு சேர்த்தல் போன்ற மாறுபட்ட சூழல் நிலவி வருகிறது.

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் 50% குறைப்பு – கல்வித்துறை உத்தரவு!!

இந்த சூழ்நிலை காரணமாக பள்ளிகள் மாணவர்களுக்கு வாக்குப்பதிவு குறித்த குழப்பமும் கேள்விகளும் உள்ளன. எனவே இதனை போக்கும் விதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே லெக்கணாப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதுகுறித்து அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் கூறுகையில்,

ஜேஇஇ பிப்ரவரி மாத தேர்வு முடிவுகள் – என்.டி.ஏ வெளியீடு!!

“பள்ளிகளில் மாணவர்களுக்கு வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு நாள் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதில் வாக்கு மையத்தில் ஒவ்வொரு அலுவலரின் பணி என்ன, முகவர்களின் பணி என்ன, வாக்காளரின் பணி என்ன போன்றவற்றை அவர்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஒரே ரெயில், ஒரே தொலைபேசி உதவி எண் 139’ -இந்தியன் ரயில்வே வெளியீடு!!

பின்னர் மாணவர்கள் வாக்காளர் பட்டியல், வாக்குசீட்டு, விரலில் மை வைத்தல் போன்ற பணி எல்லாம் செய்து மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு வாக்குப்பதிவு குறித்த விளக்கம் கிடைத்தது. மாணவர்கள் இந்த மாதிரி வாக்குபதிவில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் தங்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பின்னர் அவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து காட்டாயம் வாக்களிப்போம் என அவர்கள் தெரிவித்தனர்”, இவ்வாறு அவர் கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!