ஜேஇஇ பிப்ரவரி மாத தேர்வு முடிவுகள் – என்.டி.ஏ வெளியீடு!!
நாடு முழுவதும் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை பெற அறிவிக்கப்பட்ட ஜேஇஇ தேர்வுக்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டுள்ளது.
ஜேஇஇ தேர்வுக்கான முடிவுகள்:
நாடு முழுவதும் என்.ஐ.டி, ஐஐடி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பெற ஒவ்வொரு ஆண்டும் ஜேஇஇ நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வுகள் நான்கு கட்டங்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்,மே தேதிகளில் நடைபெற உள்ள இந்த தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பிப்ரவரி மாதத்திற்கான தேர்வுகள் 23 ஆம் தேதி தொடங்கப்பட்டு பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த தேர்வுகளில் 100 சதவிகித மதிப்பெண் பெற்று 6 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
‘ஒரே ரெயில், ஒரே தொலைபேசி உதவி எண் 139’ -இந்தியன் ரயில்வே வெளியீடு!!
இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜூலை மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ள ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகளில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஆண்டு இந்த தேர்வுகள் மட்டும் இல்லாமல் மீண்டும் 3 தேர்வுகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த தேர்வுகள் மார்ச் 15 முதல் 18 வரை, ஏப்ரல் 27 முதல் 30 வரை மற்றும் மே 24 முதல் 28 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.