முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்!!
கொரோனா தொற்று நோய் காலத்திற்கு பிறகு முதன்முதலாக கல்லூரிக்கு செல்லும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்த பதிவில் காண்போம்.
முதலாம் ஆண்டு மாணவர்கள்:
மேல்நிலைப் பள்ளியில் இருந்து முதன்முதலாக கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு பொதுவாகவே ஒரு வித தயக்கம் மற்றும் பயம் இருக்கும். ஆனால் தற்போது கொரோனா என்ற புதிய அச்சம் வேறு மாணவர்களிடையே இருக்கும் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் முதன்முதலாக கொரோனாவிற்கு பிறகு கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கான வழிகாட்டு முறைகளை இந்த பதிவில் காணலாம்.
ஏப்ரல் 11 பி.எஸ்.சி. நர்சிங் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு – இக்னோ அறிவிப்பு!!
வழிகாட்டும் நெறிமுறைகள்:
மாணவர்களின் பள்ளி பருவத்தில் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களுக்கும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் இருக்கும். ஆனால் கல்லூரி பருவத்தில் படிப்பு தொடர்பாகவோ அல்லது மற்ற ஏதேனும் கல்லூரி தொடர்பான விஷயங்கள் அனைத்திற்கும் மாணவர்கள் தாங்களாகவே தயாராக்கி கொள்ள வேண்டும். கல்லூரிக்கு வந்து விட்டால் வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று சில மாணவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வகுப்புகளை புறக்கணிக்காமல் கலந்து கொள்வது தான் மாணவர்களின் கல்விக்கு நல்லது.
கல்லூரி வகுப்புகளில் மாணவர்கள் கைபேசியை உபயோகிப்பது, பாடங்களை மனப்பாடம் செய்வதை தவிர்க்க வேண்டும். பாடங்கள் அனைத்தையும் புரிந்து படிக்க வேண்டும். பாடங்களை ஆசிரியதற்கள் நடத்தும் போது குறிப்பு எடுத்து படிக்க வேண்டும். முதலாம் ஆண்டில் மாணவர்கள் தங்கள் வீடுகளை விடுத்து வெளியில் தங்குவதால் அதிக செலவுகளை தவிர்க்க வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்கள் அதிக நேரம் இரவில் கண் விழிக்கக் கூடாது. இதனால் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்படக்கூடும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்