தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் 50% குறைப்பு – கல்வித்துறை உத்தரவு!!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாதாந்திர தேர்வுக்கான வினாத்தாள் கட்டணம் 50 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கட்டணம் குறைப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் 10 மாதங்களாக திறக்கப்பட விலையில் இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் வகுப்புகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் இதுவரை நடத்தப்பட்ட நிலையில் தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு விரைவாக பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதாந்திர தேர்வுகளுக்கான வினாத்தாள்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.30 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.40 கட்டணமும் மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது.
ஜேஇஇ பிப்ரவரி மாத தேர்வு முடிவுகள் – என்.டி.ஏ வெளியீடு!!
இந்நிலையில் கொரோனா காலத்தில் பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் மாணவர்களிடம் இந்த கட்டணத்தை கட்டாயம் வசூலிக்க கூடாது என தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்தது. இந்நிலையில் தற்போது இந்த கட்டணத்தில் 50% குறைப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.15ம், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஒரே ரெயில், ஒரே தொலைபேசி உதவி எண் 139’ -இந்தியன் ரயில்வே வெளியீடு!!
இதுகுறித்து மாநில பொது செயலாளர் பிரபாகரன் கூறுகையில்,” எங்களது சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை விரைவில் பரிசீலினை செய்த கல்வித்துறைக்கு நன்றி, மேலும் தேர்தல் பணி குறித்த கோரிக்கையும் ஏற்கப்பட்டது வரவேற்கத்தக்கது”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.