தமிழக அரசு கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு – உயர்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.15,000 இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்போது பணிபுரிந்து வரும் 4,084 கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் உயர்த்தப்பட வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது அவர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் அரசு கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 14 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை ஒப்படைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கவுரவ விரிவுரையாளர்களின் வேலைகளின் தன்மை குறித்தும், அவர்களின் கல்வித் தகுதியை அடிப்படையாக கொண்டும் 1, 2ல் பணிபுரியும் விரிவுரையாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாணவ மாணவியருக்கான மாதிரி வாக்குப்பதிவு – ஆர்வத்துடன் பங்கேற்பு!!
மேலும் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டிய 14 மாத நிலுவைத் தொகை ரூபாய் 28 கோடியே, 58 லட்சம் தொகையும் ஒப்படைக்கப்படும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து உயர் கல்வித்துறைக்கு அரசு கவுரவ விரிவுரையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.