தமிழக தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – ஏப்ரல் 8 கடைசி நாள்!!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி ஏப்ரல் 8 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி உரிமை சட்டம்:
கல்வி உரிமை சட்டம் என்பது சிறுவர்களுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த சட்டம் இந்தியாவில் உள்ள ஆறு முதல் பதினான்கு வயது வரையுள்ள சிறுவர்/சிறுமியருக்கு கல்வியை அடிப்படை உரிமையாக அறிவித்து பின்தங்கிய மாணவர்களுக்கு சேர்க்கை வழங்க தனியார் பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய விதிகளை குறிப்பிடுகிறது.
TN Job “FB Group” Join Now
2021-22 ஆம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சிறுபான்மை அல்லாத அரசு மானியம் பெறும், மானியம் பெறாத தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவிகித மாணவர் சேர்க்கை வழங்கப்படுகின்றன.
இந்த திட்டம் மூலமாக பின்தங்கிய மாணவர்களும் தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் நிலை ஏற்படுகிறது. இந்த சலுகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
‘ஒரே ரெயில், ஒரே தொலைபேசி உதவி எண் 139’ -இந்தியன் ரயில்வே வெளியீடு!!
இதில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலமாக மார்ச் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் போது எதாவது கோளாறுகள் ஏற்பட்டால் அதனை மின்னஞ்சல் முகவரி மூலமாக தெரிவிக்கலாம். இந்த சலுகைகள் குறித்து கூடுதல் விவரங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகலாம். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.