மார்ச் 15, 16ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் – பொதுச்செயலாளர் அறிவிப்பு!!
மத்திய அரசு அறிவித்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவது குறித்த அறிவிப்பை எதிர்த்து அனைத்து வங்கிகளும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
வங்கிகள் வேலைநிறுத்தம்:
மத்திய அரசு பட்ஜெட்டில் 2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கல், ஐடிஎபி வங்கி தனியார் மயமாக்கல் மற்றும் ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் 74 சதவீதம் வரை அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பல வங்கி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து, பொதுப்பணித்துறை, தனித்துறை வங்கிகளில் பணிபுரியும் 10 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதன்படி அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைப்பு சார்பில் மார்ச் மாதம் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். மேலும் பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா, கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது பல முறைகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்கள் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎப் திட்ட புதிய உறுப்பினர்களுக்கு 8.5% வட்டி இல்லை – EPFO அறிவிப்பு!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நேற்று வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் ராமராஜ் இந்த போராட்டத்திற்கு தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் அரசுத்துறை வங்கி ஊழியர்கள், தனியார்த்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.