தமிழகத்தில் அரிசி விலை திடீர் உயர்வு – பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் பல மாவட்டங்களில் அரிசி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அரிசி விலை
தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரிசி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அரிசி விலை அதிகரித்த நிலையில், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. அதன் பின் அரிசி விலை குறைந்ததை அடுத்து அந்த கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவித்தது. இந்நிலையில் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் சன்ன அரிசி விலை உயர்ந்துள்ளது.
TNPSC தேர்வில் எளிமையாக தேர்ச்சி பெற.. இதை பண்ணுங்க – முழு விவரம் உள்ளே!
மேலும் டெல்டா மாவட்டங்களிலும் விளைச்சல் குறைந்து இருப்பதால் அரிசி விலை அதிகரித்து இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு முழுவதும் அரிசி விலை குறைய வாய்ப்பு இல்லை என வணிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த 4 மாதங்களில் இட்லி அரிசி கிலோ ரூ.10ம், சன்ன ரக சாப்பாட்டு அரிசி கிலோ ரூ.12 முதல் ரூ.14 வரை உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தவிர மிக்ஜாம் புயல் காரணமாக அரிசி விலை கிலோ ரூ. 5 முதல் ரூ.10 வரை அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.