தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதார் இணைப்பு கட்டாயம் – அஞ்சல் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு!
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கை தொடங்க சிறப்பு ஏற்பாடு அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு:
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப். 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தில் பயன் பெற ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு கட்டாயம் ஆகும். அதனால் அஞ்சல் நிலையங்களில் இதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய அஞ்சல் துறை புதன்கிழமை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து சிக்னல் – பச்சை, மஞ்சள், சிவப்பு.. நிறங்களுகான காரணம் என்ன?
அதில் தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகளை அஞ்சல் நிர்வாகம் செய்துள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொண்டு “இந்தியா போஸ்ட் பேமெண்டஸ்” என்னும் வங்கி கணக்கை தொடங்கலாம்.
Follow our Twitter Page for More Latest News Updates
மேலும் அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கைபேசி மற்றும் பயோமெட்ரிக் எந்திரம் மூலம் கைபேசி எண்ணை வைத்து விரல் ரேகை மூலம் சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கை தொடங்கலாம். இதில் கணக்கு தொடங்க வைப்பு தொகை எதுவும் செலுத்த தேவை இல்லை. மேலும் மாதாந்திர உதவித்தொகையை அஞ்சலகங்களில் “டோர் ஸ்டெப் பேங்கிங்” என்னும் சிறப்பு சேவை மூலம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.