தமிழகத்தில் 12 ஆம் வகுப்பிற்கு தேர்தலுக்கு பின் விடுமுறை – புதிய தகவல்!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 7 ஆம் தேதிக்கு பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் பரவி வருகிறது. கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக முதற்கட்டமாக பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா கட்டுக்குள் வந்த பின்னர் பள்ளிகளில் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் திறந்து 2 மாதங்களில் கொரோனா தாக்கம் குறையாத காரணத்தினால் மீண்டும் மூடப்பட்டன.
TN Job “FB Group” Join Now
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி காரணமாக தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேர்வுகள் மே மாதம் 3 ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால் 7 ஆம் தேதிக்கு பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்!
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தேர்தலுக்கு பின்னர் மூட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலியாக தேர்வுகள் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகவும், தற்போது மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளதால் பொதுத்தேர்வு நடத்தப்படாமல் திருப்புதல் தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
12 th exam no covet 19 no