தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன், ஜூலை மாதத்திற்கு தள்ளிப் போகலாம் என கல்வித்துறை வட்டாரங்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் பரவி வருகிறது. கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக முதற்கட்டமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின் அரசின் துரித நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதம் 19 ஆம் தேதியும், 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்து 2 மாதங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் பணியாளர்கள் ஊதியம் – நிதி ஒதுக்கீடு!!
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே மாதம் 3 ஆம் தேதி பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 3000க்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது கடினம் என்பதால் அந்த தேர்வுகளை ஜூன், ஜூலை மாதங்களில் நடத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
So 12th student all pass summit
Unmaiya va
Yes! thank you sir