தமிழக சட்டமன்ற தேர்தல் பணியாளர்கள் ஊதியம் – நிதி ஒதுக்கீடு!!
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போது தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள ஊதியத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் வருகிற செவ்வாய்கிழமை அன்று 234 தொகுதியிலும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் மிக தீவிரமாக தங்களது பணிகளை செய்து வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 88 ஆயிரத்தி 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
தற்போது தமிழக்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருவதால் தேர்தலை பாதுகாப்பாக நடத்த வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் உள்ளது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தற்போது பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்களுக்கான ஊதியத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 6 ஊழியர்கள் இருப்பார்கள்.
4 மாவட்டங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு – மாநில அரசு உத்தரவு!!
தற்போது அந்த ஊழியர்களுக்கும் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்குமான ஊதியம் வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி இவர்களுக்கு முதல் கட்டமாக ரூ.71.21 கோடி ஊதியத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி தலைமை அதிகாரிக்கு ரூ.1700 முதல் கடைநிலை ஊழியர்களுக்கு ரூ.600 வரை அவர்களின் நிலைக்கேற்ப ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வனத்துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல் படை, சிறைத்துறை உள்ளிட்ட பாதுகாப்பு வீரர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.21.53 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இன்ஸ்பெக்டர்களுக்கு ரூ.400 முதல் ரிசர்வ் போலீசாருக்கு ரூ.150 வீதம் அவர்களின் நிலைக்கேற்ப ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.