தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – அரசு உத்தரவு!!
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. ஏப்ரல் 6ம் தேதி வரை தொடர்ந்து கடைகள் பூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் கடந்த வருடம் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தும் நோக்கில் ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்!
மேலும் அன்றைய தினம் அனைத்து நிறுவனங்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் தேர்தல் அமைதியாக நடைபெறும் நோக்கில் நாளை முதல் டாஸ்மாக்கிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக குடவுன்களில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் மதுபானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
மேலும் 30 சதவீத்திற்கு மேல் விற்பனை செய்யும் கடைகளை தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனால் பல இடஙக்ளில் டாஸ்மாக் கடைகளில் போதிய இருப்பு இல்லை எனவும், சில இடங்களில் அனைத்து மதுபானங்களை விற்று தீர்ந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் இன்று அதிகமாக காணப்படும் என கூறப்படுகிறது.
Very nice