தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – இன்று முக்கிய ஆலோசனை!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 7,819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரிடர் காலத்தில் பள்ளிகளை திறப்பது கடினம் என்பதால் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் மே மாதம் 5 ஆம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இந்த பேரிடர் காலத்தில் நடத்தப்பட கூடாது என்பதற்காக பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டதால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? இன்று முக்கிய ஆலோசனை!!
இதே போல தமிழகத்திலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து இன்று தலைமை செயலருடன், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். அதில் பொதுத்தேர்வு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.