அண்ணா பல்கலை ஆன்லைன் தேர்வு முறை – மாணவர்கள் கோரிக்கை!!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்ட தேர்வுகளில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் ஆன்லைன் தேர்வு முறையை மாற்ற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆன்லைன் தேர்வுகள்:
கொரோனா பரவல் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. இந்த மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வந்தது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டிய செமஸ்டர் தேர்வுகள் இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டது. இதன்படி பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த சனிக்கிழமை அன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது. இந்த தேர்வு முடிவுகள் மாணவர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியுள்ளது. ஏனென்றால் தேர்வு எழுதிய மாணவர்களில் 70% பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாயினர். இது குறித்து பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கையில், ‘அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வில் ஒரு குழப்பமான சாப்ட்வேரை தேர்வுத்துறை பயன்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விடுமுறை நாட்களிலும் ஆன்லைன் வகுப்புகள் – பெற்றோர்கள் அதிருப்தி!!
அதன்படி தேர்வு எழுதும் மாணவர்கள் கேமராவை விட்டு சற்று திரும்பினால் கூட அவர்கள் தேர்வுகளில் முறைகேடுகளை செய்ததாக கருதப்பட்டுள்ளது. இதனால் +2 வகுப்பில் அதிகளவு மதிப்பெண்களை எடுத்து பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்களும் தேர்வில் தோல்வியடைந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆன்லைன் தேர்வு முறையை மாற்றாவிட்டால் பொறியியல் படிப்பை மாணவர்கள் பலரும் கைவிடக்கூடிய சூழ்நிலை ஏற்படும்’ என தெரிவித்தனர்.
சிலருக்கு வாழ்கையை கை விட நேரும்…இது உண்மை