தமிழகத்தில் விடுமுறை நாட்களிலும் ஆன்லைன் வகுப்புகள் – பெற்றோர்கள் அதிருப்தி!!
கொரோனா பரவலால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படுகிறது. விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால் பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் வகுப்புகள்
கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவிய கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் கல்விக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே போல இந்த வருடமும் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் +2 மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. அவர்களும் தேர்வில்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதனால் மாணவர்களுக்கு வழக்கம் போல ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது எனவும், 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது எனவும் தெரிய வந்துள்ளது. இந்த செயல்முறைகள் மாணவர்களின் பெற்றோர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!!
இந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறும்போது, ‘தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தப்பட கூடாது. அதே சமயம் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தக்கூடாது. அப்படி தேர்வுகள் நடத்தப்படுவது தெரிந்தால் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும். முன்னதாக மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்த பிரச்சனைகள் ஏற்பட்டது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.