தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? இன்று முக்கிய ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று (ஏப்ரல் 15) தலைமை செயலருடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 7819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் பலன் தராவிட்டால் இரவு ஊரடங்கு மட்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் முழு ஊரடங்கு அமல்படுத்தாமல் கொரோனாவை கட்டுப்படுத்துவது தான் அரசின் நோக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. அதிகமாக கொரோனா பரவும் சென்னை பகுதியில் 15 களப்பணி குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மக்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – இன்று (ஏப்ரல் 15) கடைசி நாள்!!
மேலும் சென்னையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஊரடங்கு விதிகளை தீவிரப்படுத்த தலைமை செயலருடன் இன்று (ஏப்ரல் 15) ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. மேலும் கொரோனா பரவல் நாள் ஒன்றுக்கு 10,000க்கு மேல் கடந்தால் அதன் பின்னர் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து முதல்வரிடம் எடுத்து செல்லப்படும் என அவர் கூறினார்.