தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் – பாதுகாப்பு தீவிரம்!!
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று 2வது அலை காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில், அதற்கான வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு வந்து சேர்ந்துள்ளன. அவை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் விளைவாக நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 11ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டு உள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், அதில் பெறும் மதிப்பெண்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு அவசியம் என்பதால் அவ்வாறு செய்யப்படவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக மே 3ம் தேதி நடைபெற இருந்த தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் 2வது அலை வேகமெடுக்க தொடங்கியது. இதனால் மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் 2 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அறிவிப்பு!!
12ம் வகுப்பு பொதுத்தேர்வும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மே 5ம் தேதி தொடங்க இருந்த தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஏற்கனவே வினாத்தாள், விடைத்தாள்கள் தயாரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளான. 12ம் வகுப்பு வினாத்தாள்கள் வெளிமாநிலத்தில் அச்சடிக்கப்பட்டு தமிழகம் வந்தடைந்து உள்ளன. அவை கல்வி மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டு உள்ளது.