தமிழகத்தில் 2 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு Bridge Course பாடங்கள் இன்று முதல் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடுகின்றன. 2 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அதனை கட்டாயம் பார்த்து படிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
மாணவர்களுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டன. இந்த ஆண்டும் அவ்வாறே தொடர்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
எனவே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தவிர்த்து, கூடுதல் பாடங்களான Bridge Course மற்றும் Work Book பாடங்கள் நடத்தப்படும். எனவே மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்திட்டங்கள் குறித்த அடிப்படை அறிவு பெறும் வகையில் மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பயிற்சி புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேவஸ்தானம் வெளியீடு!!
மேலும் இந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்களை மாணவர்களுக்கு விளக்கும் வகையில் இன்று (ஏப்ரல் 22) முதல் மே மாதம் 10 ஆம் தேதி வரை கல்வி தொலைக்காட்சி மூலமாக 2 முதல் 9 ஆம் வகுப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்பட உள்ளன. காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த பாடங்கள் அடங்கிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு வகுப்பிற்கு பாடங்கள் நடத்தப்படுகின்றன.
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல பொதுமக்களுக்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இன்று காலை 8 மணிக்கு 9 ஆம் வகுப்பு தமிழ் பாடம் முதலில் தொடங்கப்பட உள்ளது. எனவே அனைத்து பள்ளி முதல்வர்களும் இதனை மாணவர்களுக்கு அறிவித்து, பாடங்களை கவனிக்க அறிவுறுத்துமாறு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.