தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எவ்வாறு நடத்துவது? என்பது குறித்து தேர்தலுக்கு பின் சுகாதாரத் துறையின் அறிக்கை அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் பள்ளிகள் 9 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்து சில மாதங்களில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். எனவே 9 – 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே மாதம் 3 ஆம் தேதி பொதுத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த மாணவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வந்தது. நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் செய்முறை தேர்வுகள் ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.
புதுச்சேரியில் 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!!
கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமெடுத்து வருவதால் இந்த சூழ்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது கடினம். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக 3000க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து சுகாதாரத்துறை ஆலோசனை கேட்டு பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? சுகாதாரத்துறை அமைச்சர் நாளை ஆலோசனை!
மேலும் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீராஜ்குமார், தேர்வுத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். அதில் தேர்வுக்கு மையங்கள் எவ்வாறு அமைப்பது என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பின்னர் இது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.