இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? சுகாதாரத்துறை அமைச்சர் நாளை ஆலோசனை!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. எனவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நாளை (ஏப்ரல் 5), 11 மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நோய் பரவலை தடுக்க மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இருந்த போதிலும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. ஒரு நாளைக்கு 500க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகப்படியாக ஒரே நாளில் 39,000க்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அங்கு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு ஊரடங்கு மற்றும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையின்றி வாக்களிக்கலாம் – தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!!
இந்நிலையில் கொரோனாவை தடுக்க தமிழ்நாடு, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 11 மாநிலங்களை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாளை ஆலோசனை நடத்தயுள்ளார். அதில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்தும், மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்தும் சில முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.