புதுச்சேரியில் 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!!
புதுச்சேரியில் நாளை (ஏப்ரல் 6) சட்டமன்ற தேர்தல் காரணமாக அறிவிக்கப்பட்ட 144 தடை காரணமாக வாக்களிக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.
144 தடை உத்தரவு:
புதுச்சேரியில் நாளை (ஏப்ரல் 6) சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 30 தொகுதிகளில் நடைபெறுகிறது. அதற்கான பணிகளுக்கான அனைத்து அரசு அலுவலங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. தேர்தலுக்காக பள்ளிகள் ஒரு வாரத்திற்கு முன்பாகவே விடுமுறை வழங்கப்பட்டது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாளுக்கு முன்னதாக 48 மணி நேரத்திற்கு 144 தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் நாள் அன்று ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும், அமைதியான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் எனவும் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? சுகாதாரத்துறை அமைச்சர் நாளை ஆலோசனை!
இந்த அறிவிப்பிற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஐகோர்ட் கேள்வி எழுப்பியது, எனவே இது குறித்து விளக்கம் அளித்த அவர் 144 தடை உத்தரவு இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வாக்களிக்கவும், நண்பர்கள் கூட்டமாக சென்று வாக்களிக்கவும் எந்த தடையும் இல்லை. புதுச்சேரியில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தடை உத்தரவு காரணமாக வாக்குப்பதிவில் எந்த பாதிப்பும் இருக்காது. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறவே இந்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.