10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி 2021 – அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு!!

0
10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி 2021 - அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு!!
10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி 2021 - அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

பொதுத்தேர்வுகள் தேதி:

தமிழகம் முழுவதும் சுமார் 300 நாட்களுக்கு பின்னர் பல்வேறு நெறிமுறைகளுடன் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கி உள்ளன. நடப்பு கல்வியாண்டில் 35% பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதால் மீதமுள்ள பாடங்கள் இன்று முதல் நடத்தப்பட உள்ளன. அதுமட்டுமின்றி காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்ட பின்னரே பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

‘தூய தமிழ்ப் பற்றாளர் விருது 2021’- ஜனவரி 29 விண்ணப்பிக்க கடைசி நாள்!!

பள்ளிகளை ஆய்வு செய்ய கல்வி அதிகாரிகள் அடங்கிய குழு மண்டலங்கள் தோறும் அமைக்கப்பட்டு உள்ளது. இன்று திருப்பூர் மாவட்டம் சேவூர் அரசுப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் வருகை புரிந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அவர் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் சரிவர பின்பற்றப்படுகிறதா? என்பதை நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 400 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்குதல், கிருமிநாசினி, சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு எளிதில் தயாராகும் வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளன என கூறினார்.

தமிழகத்தில் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் கட்டாயம் செயல்படும் – அரசு அறிவிப்பு!!

மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்தும் சில தகவல்களை அமைச்சர் வெளியிட்டார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேதி குறித்த விபரங்களை தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை. எனவே தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னரே 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த விபரங்கள் வெளியிடப்படும் என அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!