தமிழகத்தில் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் கட்டாயம் செயல்படும் – அரசு அறிவிப்பு!!

0
தமிழகத்தில் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் கட்டாயம் செயல்படும் - அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் கட்டாயம் செயல்படும் - அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ள நிலையில், வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் கட்டாயமாக செயல்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டது. பின்னர் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டது. அதில் ஒன்றாக கல்வி நிறுவனங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. மேலும் அந்தந்த மாநிலங்களில் உள்ள நிலவரங்களை கருத்தில் கொண்டு முடிவெடுத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை முதல் தொடக்கம் – மருத்துவ கல்வி இயக்ககம்!!

இதனையடுத்து பல்வேறு மாநில அரசுகள் ஜனவரி மாதத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தன. தமிழகத்திலும் டிசம்பர் மாத மத்தியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டு வந்தது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் அவர்களுக்கு நேரடி வகுப்புகளை விரைந்து தொடங்குமாறு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துகேட்பு கூட்டத்தில் 80% க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்று முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பள்ளிகளுக்கு வருகை புரிகின்றனர். மேலும் சமூக இடைவெளி, உடல் வெப்பநிலை பரிசோதனை, கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் வாரத்தில் 7 நாட்களும் தடுப்பூசி போடும் பணிகள் – சுகாதாரத்துறை அறிவிப்பு!!

கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு 40% வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிக்க ஏதுவாக வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் கட்டாயம் செயல்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் வார விடுமுறை விடப்படும் என கூறப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் இறங்கி உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!