தமிழகத்தில் ஜூன் 12 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் ஜூலை 12-ம் தேதி வரை சில மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் மிக அதிக கன மழையும் பெய்து வருகிறது. சென்னையைப் பொருத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழக தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – 29,984 பேர் மட்டுமே தேர்வு!
மேலும், சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் அளவிலும், அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் ஜூலை 12ஆம் தேதி வரை சில மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே அவலாஞ்சியில் 12 சென்டி மீட்டர், தேவலா 10 செ.மீ, மேல்பவானி 9 செ.மீ, சின்னக்கல்லார் 8 செ.மீ, நடுவட்டம், மேல்கூடலூர், கூடலூர் பஜாரில் 6 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், கடற்கரை பகுதிகளான குமரிக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அந்த பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும், மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் வரும் ஜூலை 12ஆம் தேதி வரை கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று அதாவது 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.