தமிழக தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – 29,984 பேர் மட்டுமே தேர்வு!

0
தமிழக தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - 29,984 பேர் மட்டுமே தேர்வு!
தமிழக தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - 29,984 பேர் மட்டுமே தேர்வு!
தமிழக தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – 29,984 பேர் மட்டுமே தேர்வு!

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசிரியர் கல்வி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதில் விண்ணப்பித்தவர்களில் 28984 பேர் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிகல்வி துறை தெரிவித்துள்ளது.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த ஜூன் 13ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் இயங்கி வருகிறது. நடப்பு கல்வியாண்டில் அரசின் பல்வேறு திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் இல்லை பற்றாக்குறை நிலவியது. இதனை சரி செய்ய ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஹேப்பி நியூஸ் – 4% முதல் 5% வரை அகவிலைப்படி உயர்வு!

தற்காலிக பணியிடங்களில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தற்காலிக பணியிடங்களுக்கு ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 28984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக கல்வித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 8 ஆண்டுகளாக பணிக்கு கிடைக்காமல் காத்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை என்று கூறி ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Exams Daily Mobile App Download

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து வரும் விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யலாம் பட்டப்படிப்பை மட்டும் முடித்தவர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!