தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி – வெளியானது !
இந்தியா மற்றும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் சார்ந்த அனைத்து தேர்வுகளையும் மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்து அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவித்தது. இந்நிலையில் தமிழக பள்ளி கல்வி துறை பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என தற்போது தெரிவித்துள்ளது
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி:
வழக்கமாக பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும். ஆனால், இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லாதல் அனைத்து பள்ளிகளும், ஆன்லைன் வகுப்பு முறையை தொடங்கி விட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை நவம்பர் மாதத்தில் திறக்க வாய்ப்பு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டால், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் முக்கியத்துவம் தரப்படும் என பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் பொதுத்தேர்வு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
So many teachers working in private schools have now become jobless struggling financially a lot who cares about them?
Ok
I am a teacher working in private school our situation is very bad condition . 🥺 consider our situation