தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில், நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக விரைந்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் அவர்களிடம் மனு அளித்து உள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு :
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை உரிய நேரத்தில் உரியவர்களுக்கு உரியவற்றை உரித்தாக்குகின்ற உன்னதமான பணியினை மேற்கொண்டு வருபவர்கள் நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டவுடன் அந்த ஊதிய உயர்வு தங்களுக்கும் வரும் என்று நியாய விலைக் கடைகளில் பணிபுரிவோர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து ஒரு செய்தி வெளியானது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
அந்நிலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினால் 22-02-2021 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் புதிய அடிப்படை ஊதியத்தில் 14% வழங்கப்படும் என்று மட்டும் சொல்லப்பட்டுள்ளது என்பதையும், ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு குறித்து எந்தத் தகவலும் அரசாணையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டி, அரசிடமிருந்து இது குறித்து ஆணை பெறப்படும் வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்குமாறு கூட்டுறவு சங்கங்களின் நுகர்வோர் பணிகளுக்கான கூடுதல் பதிவாளர் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – தகவல்களை திருத்துவது எப்படி? ஆன்லைன் செயல்முறைகள் இதோ!
இந்நிலையில் நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கத்திடம், நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் சார்பில் மனு ஓன்று அளிக்கப்பட்டு உள்ளது. அந்த மனுவில் கூட்டுறவுத்துறை பதிவாளரின் வார்த்தைகளை சுட்டிக்காட்டி அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் விரைவில் அகவிலைப்படி உயர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.