இன்று தமிழக சட்ட மன்ற கூட்டத்தொடர் தொடக்கம் – அமைச்சர்கள் பதிலுரை!
தமிழகத்தின் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில் அமைச்சர்கள் உறுப்பினர்களின் கேள்விகளுக்கான பதில்களை வழங்கி வருகின்றனர்.
சட்டமன்ற கூட்டத்தொடர்:
தமிழகத்தில் அக்டோபர் ஒன்பதாம் தேதியான இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டமன்ற கூட்டத்தில் சபாநாயகர், முதல்வர், அமைச்சர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். நடப்பு ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் மார்ச் 20 முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. இன்றைக்கு தொடங்கும் இரண்டாம் கட்ட சட்டமன்ற கூட்டத்தொடரானது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடைபெறும் என்றும், மாநிலத்தின் பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகள் திறப்பு – குஷியில் மாணவர்கள்!
இன்றைய சட்டமன்ற கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற குழுவினர் தமிழக சட்டமன்றத்தை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்றைய கூட்டத்தொடரில் முக்கியமாக சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் உரை அளித்து வருகின்றனர்.