மதுரை “டங்ஸ்டன்”சுரங்கம் எதிர்ப்பு…தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்…!! “முழு விவரம் உள்ளே”..!!
மதுரை மாவட்டம், மேலூர் வட்டாரத்தில் உள்ள நாயக்கர்பட்டியில் “டங்ஸ்டன்” சுரங்கம் அமைக்கும் பணியை வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனமான “இந்துஸ்தான் ஜிங்க்” நிறுவனத்திற்கு ஒன்றிய சுரங்க அமைச்சகம் அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டி, சமீபத்தில் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதைத்தொடர்ந்து, தற்போது “டங்ஸ்டன்” சுரங்கம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
“டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் ராஜினமா செய்யவும் தயார்” சட்டமன்றத்தில் முதல்வர் பகீர் அறிவிப்பு..!!
அதாவது, மதுரையில் “டங்ஸ்டன்” சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்ற பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த ஒரு சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்றும் டங்ஸ்டன் உரிமத்தை ரத்து செய்யவும் ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
























