TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!
தமிழகத்தில் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தோட்டக்கலை சார்நிலைப் பணிக்கு தேர்வு எழுதியுள்ளவர்களுக்கு வரும் டிசம்பர் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC அறிவிப்பு:
தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளுக்கான தேர்வு TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணாமாக அரசுத் தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் அரசுத்தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு படிப்படியாக கலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு தோட்டக்கலை சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
IPL 2022 சென்னையில் ஏப்ரல் 2ம் தேதி தொடக்கம்? ரசிகர்கள் உற்சாகம்! 2 புதிய அணிகள் சேர்ப்பு!
மேலும் இதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. அதற்கான தரவரிசை பட்டியல் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது அதற்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதி மற்றும் அதுகுறித்த கூடுதல் விபரங்கள் TNPSC தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இதற்கான கலந்தாய்வு வரும் டிசம்பர் 8ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் இதுகுறித்த விபரங்கள் கலந்தாய்விற்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களுக்கு SMS மற்றும் e- Mail மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உயர்வு – 7வது ஊதியக் குழு பரிந்துரை!
இத்தகைய மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வானது சென்னை – 3 தேர்வாணையச்சாலை பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் மற்றும் இதுகுறித்த முழு விபரங்கள் அடங்கிய நுழைவு கடிதத்தினை TNPSC தேர்வாணைய அதிகாரபூர்வ இணையதளமான www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை செய்து கொண்டு கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.