IPL 2022 சென்னையில் ஏப்ரல் 2ம் தேதி தொடக்கம்? ரசிகர்கள் உற்சாகம்! 2 புதிய அணிகள் சேர்ப்பு!
2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் சென்னையில் ஏப்ரல் 2ம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 சீசன்களாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.
ஐபிஎல் போட்டிகள்:
உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா பரவல் கிரிக்கெட்டையும் விட்டு வைக்கவில்லை. இதனால் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் 2 வருடங்களாக கொரோனா அச்சத்தினால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. எனவே போட்டிகளை நேரில் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். பலரும் லட்சக்கணக்கில் செலவு செய்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று போட்டிகளை கண்டுகளித்தது குறிப்பிடத்தக்கது. இது ரசிகர்களுக்கு ஐபிஎல் போட்டிகள் மீதான மோகத்தை தெளிவாக காட்டுகிறது. தற்போது அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது 2022 ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 2ம் தேதி முதல் சென்னையில் தொடங்கலாம் என கூறப்படுகிறது.
புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உயர்வு – 7வது ஊதியக் குழு பரிந்துரை!
ஆனால் போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் தயார் செய்யப்படவில்லை. பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து இந்த தகவல்கள் கசிந்துள்ளன. ஐபிஎல் தொடரில் இம்முறை 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் போட்டிகள் 60 நாட்களுக்கும் மேல் நடைபெறும். ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாடும். இந்த ஆண்டிற்கான கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றி உள்ளதால் அடுத்த ஆண்டின் முதல் போட்டி சென்னையில் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. ஆனால் ரசிகர்கள் போட்டியை காண அனுமதிக்கப்படுவார்களா? என்பது இன்னும் உறுதியாகவில்லை. இருப்பினும் முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு! முழு விபரம் இதோ!
இது ஐபிஎல் போட்டிகள் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 2022 ஐபிஎல் போட்டிகளின் வீரர்களுக்கான ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறும். இம்முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தலைமையில் களமிறங்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். மேலும் அகமதாபாத், லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் இணைந்துள்ளதால் போட்டிகளில் அதிரடி ஆட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது.