தமிழகத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு! முழு விபரம் இதோ!
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை முடிவடைந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த வடகிழக்கு பருவமழையானது தென்னிந்தியாவில் பரவலாக பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதால் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு!
இந்நிலையில் தற்போது நிலவி வரும் வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தினந்தோறும் கனமழை பெய்து வருகிறது. அவ்வாறு பெய்து வரும் கனமழையால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மழை பொழிவு அதிகம் காணப்படும் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி அவ்வப்போது மாவட்ட நிர்வாகத்தால் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறாக கடந்த மாதம் தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – இனி Forwarded Audio மெசேஜ்க்கும் பிளேபேக் வேகம்!
அந்த வகையில் இன்று நவ.25ம் தேதி கனமழை காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.