தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருவதால் இன்று ( நவ.25) இரண்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் தெற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்றும், இது மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – இனி Forwarded Audio மெசேஜ்க்கும் பிளேபேக் வேகம்!
ஏனைய வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (நவ.25) புதுக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.