பாக்கியாவை வேலை செய்யக்கூடாது என சொல்லும் கோபி, தீபாவளிக்கு ட்ரெஸ் வாங்கி தரும் எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
பாக்கியாவை வேலை செய்யக்கூடாது என சொல்லும் கோபி, தீபாவளிக்கு ட்ரெஸ் வாங்கி தரும் எழில் - இன்றைய
பாக்கியாவை வேலை செய்யக்கூடாது என சொல்லும் கோபி, தீபாவளிக்கு ட்ரெஸ் வாங்கி தரும் எழில் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
பாக்கியாவை வேலை செய்யக்கூடாது என சொல்லும் கோபி, தீபாவளிக்கு ட்ரெஸ் வாங்கி தரும் எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா ஆர்டர்ஸ் எல்லாம் செய்து கொண்டே இருக்கிறார். பின் கோபி வந்து பாக்கியா இப்படி செய்வது எல்லாம் சரி இல்லை என கோபி சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா செய்த பலகாரத்தை நான் கொண்டு சென்று கொடுக்கிறேன் என ராமமூர்த்தி சொல்ல, பாக்கியா நாங்களே கொண்டு சென்று கொடுக்கிறோம் என சொல்கிறார். பலகாரம் அனைத்தும் நன்றாக இருக்கிறது என தாத்தா சொல்ல, முறுக்கு அருமையாக இருக்கிறது என செல்வி சொல்கிறார். அவள் செய்ததால் தான் இப்படி சொல்கிறார் என தாத்தா சொல்ல, அப்போது ஈஸ்வரி வருகிறார். அவர் பலகாரத்தை சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என சொல்ல, செல்வி தன்னுடைய மாமியார் பற்றி பேசி சிரிக்கிறார்கள்.

சரஸ்வதியை பெண் கேட்கும் ஆசிரியர், சாந்திமுகுர்த்தத்திற்கு ஏற்பாடு செய்யும் கோதை – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!

பின் கோபி வர ஈஸ்வரி வந்து காபி கொடுக்கவா என கேட்கிறார். கோபி இப்படி வாசலில் உட்கார்ந்து பாத்திரம் வைத்து சமைப்பதால் வீடு நாசமாக போகிறது என சொல்கிறார். ஈஸ்வரி ஆமாம் தரை எல்லாம் எண்ணெய் கொட்டி வைத்திருக்கிறார் என சொல்ல, வீட்டில் வயசானவர்கள் இருக்காங்க கிழே விழுந்தால் என்ன ஆகும் என கோபி கேட்கிறார். பின் சுவரெல்லாம் எண்ணெய் ஆகிவிடுகிறது என சொல்கிறார். பின் பாக்கியா வர கோபி இப்படி வாசலில் பாத்திரம் வைத்து சமைப்பது நன்றாக இல்லை என சொல்கிறார். இதோ முடிந்துவிட்டது என பாக்கியா சொல்ல, நான் சொல்வது புரியவில்லையா என கேட்கிறார்.

நீ இப்படி சமைப்பதால் வீடு அசிங்கமாக இருக்கிறது என கோபி சொல்ல, தனியாக இடம் பார்க்க இப்போது தான் மாமா சொன்னார் என சொல்கிறார். பின் உன் மாமா நீ கேட்டதும் சொத்து எழுதி கொடுத்திருக்கார் இடம் தேடி கொடுக்கமாட்டாரா என கேட்கிறார். பின் பாக்கியா அனைவருக்கும் பலகாரம் கொடுத்து சோர்வாக இருக்கிறார். பின் ராதிகா வீட்டிற்கு சாப்பாடு கொடுக்க வருகிறார். ராதிகா அம்மா பாக்கியாவை பார்த்து சந்தோசப்படுகிறார். செல்வியை அறிமுகம் செய்ய, தீபாவளி பலகாரம் கொண்டு வந்ததாக பாக்கியா கொடுக்கிறார்.

தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு!

ஆர்டர் செய்ததே நிறையாக இருக்கு என சொல்ல மயூராவிற்கு நான் தீபாவளிக்கு செய்து கொடுத்திருக்கேன் என சொல்கிறார். பின் ராதிகா மற்றும் அவர் அம்மாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். நீங்க மூன்று பேரும் தீபாவளிக்கு எங்க வீட்டிற்கு வாங்க என பாக்கியா சொல்ல முயற்சி செய்கிறேன் என சொல்கிறார். பின் பாக்கியாவை மயூரா இங்கையே இருங்க என சொல்ல, நான் தீபாவளி முடிந்து இருக்கிறேன் என சொல்கிறார். ராதிகா அம்மா எனக்கு இங்க வேலையே இல்லை என சொல்ல, ரெஸ்ட் எடுங்க என ராதிகா அம்மா சொல்கிறார்.

பின் பாக்கியா வீட்டில் எழில் வர பாக்கியா சாப்பிடுறியா என கேட்கிறார். உடனே இனியா இந்த அம்மாவிற்கு வேற வேலை இல்லையா என சொல்ல, எழில் அனைவர்க்கும் தீபாவளி ட்ரெஸ் வாங்கி கொடுக்கிறார். பின் பாக்கியாவிற்கு ட்ரெஸ் வாங்கி கொடுக்க அதை பார்த்து பாக்கியா சந்தோசப்படுகிறார். அப்போது ஈஸ்வரி வேலை செய்கிறாள் வாங்கி கொடுத்தால் அவளுக்கு எதற்கு 2 புடவை என சொல்ல பாக்கியா வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!