நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் காணொலி வாயிலாக ஆஜராகலாம் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் உச்சநீதிமன்றம் வழக்கறிஞர்களை காணொலி வாயிலாக ஆஜராகலாம் என அறிவித்துள்ளது.
கொரோனா பரவல்
நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. மேலும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தற்போது பல்வேறு மாநிலங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக்கி வருகின்றனர்.
சுகாதார பணியாளர்களின் பணி காலம் நீட்டிப்பு.. அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!
இந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருவதால், நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை உணர முடிகிறது என்பதால், நீதிமன்ற வழக்குகளுக்கு வழக்கறிஞர்கள் காணொலி வாயிலாக ஆஜராகலாம் என அறிவித்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் பட்சத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.