சுகாதார பணியாளர்களின் பணி காலம் நீட்டிப்பு.. அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இந்த நிலையில் தேவை கருதி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணிக்காலம் நீட்டிப்பு:
இந்தியாவில் திடீரென கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு 4,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து புதுச்சேரியிலும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு ‘இது’ கட்டாயம் – ஆட்சியர் உத்தரவு!
இந்த நிலையில் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிக்கான சிகிச்சை வசதிகள், படுக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன் தொடர்ச்சியாக கொரோனா பரவல் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கான பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி காரைக்காலில் 58 மருத்துவர்கள், 261 செவிலியர்கள் மற்றும் 2 எக்ஸ்ரே டெக்னிஷியன் மற்றும் பிற சுகாதார பணியாளர்களின் பணிக்காலம் மேலும், 3 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.