கோவை ஈஷா மைய வழக்கு.. விசாரணைக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
சமீபத்தில் பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது இரண்டு மகள்களும் மூளைச்சலவை செய்யப்பட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் ஈஷா யோகா மையத்தில் சோதனை நடத்த நீதிமன்றம் அளித்த அனுமதியின் அடிப்படையில் சமூக நலத்துறை அதிகாரிகளும், தமிழ்நாடு காவல்துறையினரும் கடந்த அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் உடனடியாக ஈஷா மையம் உச்சநீதிமன்றத்தை நாடி காவல்துறையினர் விசாரணை நடத்த தடை வாங்கியது.
BREAKING NEWS: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வந்தாச்சு…!! அரசு அறிவிப்பு..!!
இந்நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது. ‘கோவை ஈஷா மையத்திற்கு எதிரான நிலுவை வழக்குகளை விசாரிக்க எந்த தடையும் இல்லை’. ‘பணியிட பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாகா கமிட்டியை அமைக்க வேண்டும்’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
























