இனி பெண்களுக்கு கோவில்களில் கடுமையாகும் ஆடை கட்டுப்பாடு – மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்ய வரும் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆடை கட்டுப்பாடு
இந்தியாவில் என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் கலாச்சாரம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பல மாநிலங்களில் உள்ள பெரிய கோவில்களில் ஆண் மற்றும் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இந்து அறநிலைத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. ஆண்கள் கைலி அரைக்கால் டவுசர் அணிய கூடாது எனவும், பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் குட்டை பாவாடை அணிய கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து உத்திரபிரதேசம் மாநிலத்தில் முசாபர்நகரில் உள்ள பாலாஜி தாம் கோயிலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி அரை பேன்ட், மினி ஸ்கர்ட் போன்ற குட்டையான ஆடைகளை அணிந்த பெண்கள் குலதெய்வ தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் அது போல ஆடை அணிவதால் மற்றவர்களின் கவனத்தை சிதறடிக்கிறது. இதனை நாங்கள் கவனித்து இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கோவில் தலைமை பூசாரி தெரிவித்துள்ளார்.