தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் – காவல்துறை எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் - காவல்துறை எச்சரிக்கை!!
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் - காவல்துறை எச்சரிக்கை!!
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் – காவல்துறை எச்சரிக்கை!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 2 வாரம் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாட்டை பொதுமக்கள் சரியாக பின்பற்றாத நிலையில், இன்று (மே 14) முதல் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தீவிரம்:

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் மே 10 முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு வாரங்களில் மளிகை, காய்கறி கடைகள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஊரடங்கு விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாமல் பொது இடங்களில் சுற்றி திரிந்தபடி காணப்படுகின்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர் உயர்வு – வாகன ஓட்டிகள் கவலை!!

அதனால் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமாக மக்களுக்கு அறிவுரைகளை வழங்கி வந்தனர். அதே போல ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி பொது இடங்களில் சுற்றி கொண்டிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் இன்று (மே 14) முதல் ஊரடங்கு நடைமுறைகள் மீண்டுமாக தீவிரப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை அறிவித்துள்ளபடி, ‘கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் படி மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

railway
railway

பொது மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர பிறவற்றிற்கு வெளியே வர வேண்டாம் எனவும், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இன்று வரை மக்கள் அந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை. இதனால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் நாளை (மே 14) முதல் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வரும் வாகனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டபூர்வமான நடவடிக்கையில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!