தமிழகத்தில் கடுமையான முழு ஊரடங்கு உத்தரவு – அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்!!
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் மேலும் தீவிரப்படுத்தப்படும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் தீவிரம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஒரு நாளில் 30 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் ஏற்கனவே மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் – காவல்துறை எச்சரிக்கை!!
இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் மிக கடுமையாக பின்பற்றப்படும் எனவும் விதிகளை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அனைத்து கட்சியினர் கூட்டம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடத்தப்பட்டது. அதில் மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமை வகித்தார்.
TN Job “FB Group” Join Now
அப்போது, தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் மேலும் தீவிரப்படுத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்