தீபாவளி அன்று கூடுதல் நேரத்தில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை – ஆணையர் எச்சரிக்கை!
தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை:
வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை), தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல்வேறு கடுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல இந்த ஆண்டும் இதே செயல் முறையை அரசு செயல் படுத்த உள்ளது. அதாவது, தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அது மட்டும் அல்லாமல், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89-ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ கூடாது என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
நெருங்கும் தீபாவளி.. போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட அதிரடி தடை – அரசின் திடீர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஒரு முக்கிய எச்சரிக்கையை மக்களுக்கு விடுத்துள்ளார். அதாவது அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரத்தில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கைகள் எடுப்போம் எனவும், பட்டாசு விற்பனையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.