நெருங்கும் தீபாவளி.. போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட அதிரடி தடை – அரசின் திடீர் அறிவிப்பு!
தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில், மக்கள் கூட்டம் கடைத்தெருக்களில் நிரம்பி வழிகிறது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்திற்கு தடை:
தீபாவளி பண்டிகை தான் நமது நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து அதிக அளவில் சிறப்பாக கொண்டாடும் பண்டிகையாக உள்ளது. இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் தீபாவளி பண்டிகையை எதிர்பார்த்திருப்பது வழக்கம். காரணம், தீபாவளி பண்டிகை சமயத்தில் தான் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் போனஸ் வழங்கும். இதனால் மக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை அதிக மும்முரமாக வாங்குவதற்கு முற்படுவார்கள்.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், கடந்த 2 வருடங்களாக தீபாவளி பண்டிகை அதற்கான எந்த வித அடையாளமும் இல்லாமல் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மிகவும் அதிக கட்டுப்பாடுகளுடன் தான் கடந்து சென்றது. அதனால் மக்கள் இந்த வருடம் தீபாவளியை அதிக ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர். தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் மக்கள் கூட்டம் கடைவீதியெங்கும் நிரம்பி வலிக்கிறது.
தமிழகத்தில் அக். 25ம் தேதி விடுமுறை? – மாணவர்களுக்கு தீபாவளி ட்ரீட் கொடுக்குமா தமிழக அரசு!
Exams Daily Mobile App Download
இதனால் பஸ், கார், லாரி, ஸ்கூட்டர் மற்றும் இது போன்ற வாகனங்கள் சாலைகளில் செல்ல முடியாத அளவிற்கு முக்கிய சாலைகளில் கூட்டம் உள்ளது. எனவே, புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு நேரு வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை போன்ற வீதிகளில் அதிக மக்கள் கூட்டம் இருப்பதால், நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கையாக அக்டோபர் 21ம் தேதியாக நாளை முதல் 24ம் தேதி வரை மாலை நேரங்களில் போக்குவரத்திற்கு தடை விதித்து புதுச்சேரி அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.