பொதுமக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கும் மாநில அரசு – உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
மாநில அரசுகள் ஓட்டுக்களை பெறுவதற்காக தேர்தலுக்கு முன்பாகவே இலவச பொருட்களை வழங்கி வரும் நிலையில் உச்சநீதிமன்றம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
இந்தியாவில் உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இனி வரும் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், மக்களின் ஓட்டு கிடைக்க வேண்டும் என்பதற்காக இலவச பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர். இதனால், மக்களின் பணம் தான் வீணடிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பரிசு வழங்க திட்டம் – வந்தாச்சு புது ரூல்ஸ்!
மேலும், சட்டசபையிடம் முறையான அனுமதி பெறாமல் மாநில அரசால் இலவச மின்சாரம், குடிநீர் மற்றும் கடன் தள்ளுபடி வழங்க முடியாது. ஆனால், பொதுமக்களுக்கு கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் வழங்குவதாக கூறி பறைசாற்றுகின்றனர். மேலும், தேர்தலுக்கு முன்னதாகவே மாநில முதல்வர்கள் வெளியிடும் தேர்தல் அறிக்கையை நீதிமன்றம் தான் உருவாக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள், தேர்தல் கமிஷன் மற்றும் ரிசர்வ் வங்கி இதற்கு தகுந்த பதிலை 4 வாரத்திற்குள் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.