பிப். 21க்குள் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை – மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!!
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிப்ரவரி 21ஆம் தேதிக்குள் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
நிலுவைத் தொகை:
நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். ஆனாலும், அவ்வப்போது சரியாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலையாட்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அந்த வகையில் தற்போது மேற்குவங்கம் மாநிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி 48 மணி நேரம் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்தது.
Follow our Instagram for more Latest Updates
ஆனால், மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 21 லட்சம் ஊழியர்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை மாநில அரசே உடனடியாக பிப்ரவரி 21ஆம் தேதிக்குள் அந்தந்த ஊழியர்களின் வங்கி கணக்கிலேயே செலுத்தும் என முதல்வர் மம்தா பேனர்ஜி அவர்கள் அறிவித்துள்ளார்.