ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அடித்த ஜாக்பாட்.. தொழில்முனைவோருக்கு நிதி உதவி வழங்கும் அரசாங்கம்..
மேலும் மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை இந்த ஸ்டார்ட் அப் இந்தியா விதை நிதித் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள தகுதியான நபர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க உதவி அளிக்கிறது. இந்த திட்டமானது சமூக தாக்கம், கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை, நிதி உள்ளடக்கம், கல்வி, விவசாயம், உணவு, உயிரிய தொழில்நுட்பம், சுகாதாரம், பாதுகாப்பு, விண்வெளி, ரயில்வே, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளில் புதுமையான தீர்வுகளை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம், மத்திய அல்லது மாநில அரசின் வேறு எந்தத் திட்டத்தின் வாயிலாக 10 லட்ச ரூபாய்க்கு மேல் பண உதவியைப் பெற்றிருக்கக் கூடாது. நிறுவனங்கள் சட்ட ஒழுங்குமுறைகள் 2018 ன் படி, திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் நிறுவன பங்கு குறைந்தது 51% ஆக இருக்க வேண்டும். இந்த தகுதிகள் இருக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் ரூ.30 லட்சம் வரை இந்த திட்டத்தில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) தெரிவித்துள்ளது.



























Hi sir SRI SIVASAKTHI MANUFACTURER OPC PRIVATE LIMITED