
“தமிழ்நாடு இதை ஒருபோதும் அனுமதிக்காது”…மதுரை டங்ஸ்டன் சுரங்கம் குறித்து பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் !! “
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று அமைக்கப்படுவதால், சுற்றுச்சூழல் கேடு ஏற்படாமலும், மக்களுக்கு உடல்நல குறைபாடு ஏற்படாமலும் இருக்கிறது. அந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் டங்ஸ்டன் சுரங்கம் மதுரையில் அமைக்கக்கூடாது என்று MP வெங்கடேசன் நேற்று மத்திய அமைச்சரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, மதுரை மாவட்டம், மேலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள நாயக்கர்பட்டியில் “டங்ஸ்டன்” சுரங்கம் அமைக்கும் பணியை வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனமான “இந்துஸ்தான் ஜிங்க்” நிறுவனத்திற்கு மத்திய சுரங்க அமைச்சகம் அனுமதி அளித்ததை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது, “சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிமை ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது. இதுபோன்ற சுரங்க தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது” என்று அவர் கூறியுள்ளார்.
























