தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த இடங்களில் சிறப்பு ரயில்கள் – முழு விபரங்கள் இதோ!

0
தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த இடங்களில் சிறப்பு ரயில்கள் - முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த இடங்களில் சிறப்பு ரயில்கள் - முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த இடங்களில் சிறப்பு ரயில்கள் – முழு விபரங்கள் இதோ!

தமிழகத்தில் பண்டிகை காலங்களை முன்னிட்டு பயணிகளுக்கிடையே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் இரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற 4ம் தேதி மற்றும் 11ம் தேதிகளில் இயக்கப்பட உள்ள ரயில்கள் குறித்த முழு விவரத்தை பார்ப்போம்.

சிறப்பு ரயில்கள்:

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள். அதனால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதனை தவிர்க்க பயணிகளின் வசதிக்கேற்ப கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் தமிழகத்தில் வருகிற ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். இதனால் இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

அந்த வகையில் பெங்களூரு அருகே உள்ள யஸ்வந்த்பூர் – நெல்லை, மைசூர் – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யஸ்வந்த்பூர் – நெல்லை சிறப்பு ரயில் வருகிற 4 மற்றும் 11ம் தேதிகளில் யஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு நெல்லை செல்லும் எனவும் அதன்பிறகு அக்டோபர் 5 மற்றும் 12ம் தேதிகளில் நெல்லையில் இருந்து இந்த சிறப்பு ரயில் காலை 10.40 மணிக்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அமலாகும் Work From Home செயல்முறை – தலைநகரில் நடக்க இருக்கும் விபரீதம்!

Exams Daily Mobile App Download

இறுதியாக அடுத்த நாள் இரவு 11.30 மணிக்கு அதாவது அக்டோபர் 6 மற்றும் 13ம் தேதிகளில் யஸ்வந்த்பூரை வந்தடைகிறது என தெற்கு ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு ரயில் நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், விருதுநகர், கோவில்பட்டி, மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!